நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் உத்தரபிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தால் பெறப்பட்டன, இந்த எண்ணிக்கை 2014 க்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை.
23,722 புகார்கள் பெறப்பட்ட 2020 உடன் ஒப்பிடும்போது 2021 இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தரவுகளின்படி, 30,864 புகார்களில், அதிகபட்சமாக 11,013 பெண்களின் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட கண்ணியத்துடன் வாழும் உரிமை தொடர்பானவை, அதைத் தொடர்ந்து 6,633 குடும்ப வன்முறை தொடர்பானது. மேலும் வரதட்சணை துன்புறுத்தல் தொடர்பாக 4,589 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிகபட்சமாக 15,828 புகார்கள் பதிவாகியுள்ளன, டெல்லியில் 3,336, மகாராஷ்டிரா 1,504, ஹரியானாவில் 1,460 மற்றும் பீகாரில் 1,456 புகார்கள் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி, கண்ணியத்துடன் வாழும் உரிமை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான அதிக புகார்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.